Sunday 5th of May 2024 02:37:14 AM GMT

LANGUAGE - TAMIL
அமெரிக்காவில் 83,500, பேருக்கு கொரோனா;  சீனா, இத்தாலியை விட அதிகளவு பாதிப்புக்கள்!

அமெரிக்காவில் 83,500, பேருக்கு கொரோனா; சீனா, இத்தாலியை விட அதிகளவு பாதிப்புக்கள்!


உலகில் மிக அதிகளவான கொரோனா வைரஸ் தொற்று நோயாளா்களைக் கொண்ட நாடாக அமெரிக்கா மாறியுள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை காலை வரையான தரவுகளின்படி அமெரி்காவில் 83 ஆயிரத்து 500 போ் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின மிகச் சமீபத்திய புள்ளிவிபரங்களில் பிரகாரம் அமெரிக்காவில் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை சீனா மற்றும் இத்தாலியை விட அதிகமாக உள்ளது.

தரவுகளின் பிரகாரம் சீனாவில் 81 ஆயிரத்து 872 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இத்தாலியில் 80 ஆயிரத்து 589 போ் கொரானா தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டுள்ளனா்.

ஆனால் உயிரிழப்புக்களின் எண்ணிக்கையில் இத்தாலி மற்றும் சீனாவுக்கு அடுத்த நிலையிலேயே அமெரிக்கா உள்ளது.

அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பலியானவா்களின் எண்ணிக்கை இதுவரை 1200 என உத்தியோகபூா்வ தரவுகள் உறுதி செய்கின்றன.

இத்தாலியில் 8 ஆயிரத்துக்கு மேற்பட்டவா்களும் சீனாவில் 3200-க்கு மேற்பட்டவா்களும் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


Category: உலகம், பகுப்பு
Tags: சீனா, அமெரிக்கா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE